Thursday, May 30, 2013

ஸ்ரீ தொள்ளைக்காது சித்தர் பகுதி-1

    

  ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகள்


    
ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகளின் –
இயற் பெயர் என்ன -தாய் தந்தையர் யார்
எப்பொழுது பிறந்தார்-எங்கிருந்து வந்தார்
என்பது யாருக்கும் தெரியாது.
புதுவை, கோரிமேடு அடுத்துள்ள முரட்டாண்டி
என்னும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில் தான்
ஊர் மக்கள் பார்த்தார்களாம்.
இள வயதிலேயே தந்தையை இழந்த
சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு
செய்வதைக் கண்டு மிரண்டு
போய் தன் குலதெய்வமான அம்மனிடம் 
முறையிட்டார்.
அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது
போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை
கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கியவர்
”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன்
தான் தன் நிலை அடைந்தார்.
அங்கிருந்த முத்து மாரியம்மன் கோவிலை
அடைந்து அம்மனை வேண்டினார்.
இடைவிடாது தாயை வணங்கிக்
கொண்டேயிருந்தார்.
அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின்
தரிசனக் காட்சியை- அன்றிரவு கண்ணாரக்
கண்டார். வாய் பேசா ஊமையானார்.
ஞான மோன நிலைக்குள் தன்னை நிறுத்திக்
கொண்டு யாவற்றையும் உணர்ந்தார். அங்கு
சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது.

அத்துடன் அங்கிருந்து ஐந்து மைல்
தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று-
கடற்கரை அருகில் இருந்த மணற்
குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை
பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும்
வழிபட்டு வந்தார்.
தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து
புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு
மலர் அலங்காரம் செய்து- பூஜை செய்து
வழிபட்டுவிட்டு –பின் அங்கிருந்து திரும்பவும்
நடந்து முரட்டாண்டிக்கு
வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார்.
இது அவரின் தினசரி வாடிக்கையானது.

சுவாமிகள் எங்கிருக்கிறார்,என்ன செய்கிறார்,
என்பதை மக்களால் கண்டு கொள்ள
இயலவில்லை. ஆனால், யார், என்ன துன்பம்
என்று சுவாமிகளை தேடி வந்து முறையிட்டாலும்
-அவர்களின் துன்பம் பறந்தோடியது.நோயாளிகள்,
சுவாமிகள் தரிசனத்திலேயே குணமடைந்தார்கள்.
சுவாமிகள் அருளுடலில் ஆத்ம பேரொளி வீசத்
தொடங்கியது.
இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும்
சுவாமிகளிடத்தில் பேரன்புடையவர்களாக
இருந்தார்கள்.

முகத்தில் பல நாள் மீசை தாடியோடு
அழுக்கடைந்த வேஷ்டியுடன்- பார்க்க ஒரு
சாமியாரைப் போல் இருந்ததினால்-மக்கள்
அவரை ”ஆண்டி” என்று அழைத்தார்கள்.
அவரின் முரட்டுத்தனமான செய்கையை
கண்ட மக்கள் அவரை “முரட்டு ஆண்டி” என்று
அழைத்து வந்தனர். காலப்போக்கில் அவர்
தங்கியிருந்த ஊர் அவர் பெயரைக் கொண்டே
“முரட்டாண்டி சாவடி” எனவும், ”முரட்டாண்டி”
எனவும் வழங்கப்படலாயிற்று.  






No comments:

Post a Comment